< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான ஜம்மு கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி வழங்கல்
|9 Jan 2023 9:19 PM GMT
ஜம்முவின் ரஜோரியில் உள்ள டோங்கிரி கிராமத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டோங்கிரி கிராமத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்து மதத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்திலலும் டோங்கிரி கிராமத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டோங்கிரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கிராம பாதுகாவலர்களாக செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.