< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் என்கவுண்ட்டர்:  லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டு கொலை
தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டு கொலை

தினத்தந்தி
|
31 July 2022 1:34 AM GMT

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில், பின்னர் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று தகவல் கிடைத்ததும், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் பட்டான் நகரை சேர்ந்த பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர். இந்த என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இர்ஷாத் அகமது பட் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி ஒன்று, பல சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்