< Back
தேசிய செய்திகள்
காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல்

தினத்தந்தி
|
7 Aug 2024 10:07 AM GMT

காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றனர். தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக அசாம், மத்திய பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி நிறைவடையும் என்றும் வேட்புமனு பரிசீலனை 22-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்களவை தொகுதிக்கும் தனித்தனியாக செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்