< Back
தேசிய செய்திகள்
ரெயில் விபத்து எதிரொலி: சென்னை மெயில் ரெயில் உட்பட 6 ரெயில்கள் ரத்து..!
தேசிய செய்திகள்

ரெயில் விபத்து எதிரொலி: சென்னை மெயில் ரெயில் உட்பட 6 ரெயில்கள் ரத்து..!

தினத்தந்தி
|
2 Jun 2023 4:56 PM GMT

ஒடிசாவில் 10க்கும் மேற்பட்ட ரெயில்நிலையங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தா,

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரெயில் யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பகுதிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் நபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் மேலும் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ரெயில் விபத்து காரணமாக ஹவுராவில் இருந்து இயக்கப்படும் சென்னை மெயில் ரெயில் உட்பட மொத்தம் 6 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 5 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. மேலும், ஒடிசாவில் 10க்கும் மேற்பட்ட ரெயில்நிலையங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்