< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அந்தமான் கடலில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.6 ஆக பதிவு
|5 Jun 2022 10:38 AM GMT
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
போர்ட் பிளேர்,
அந்தமான் கடல் பகுதியில் இன்று மதியம் 2.21 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 4.6 ஆக பதிவாகி உள்ளது.
கடல்மட்டத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக, தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அந்தமான் பகுதிகளில் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.