< Back
தேசிய செய்திகள்
மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு
தேசிய செய்திகள்

மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.0 ஆக பதிவு

தினத்தந்தி
|
13 Jun 2022 2:26 AM GMT

மேகாலயாவில் இன்று காலையில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.



துரா,



வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவின் துரா நகரில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 43 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 6.32 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

நேபாள நாட்டை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்த திபெத்தில் இன்று அதிகாலையில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில், நேபாளத்தின் கிழக்கு எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்