< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் நிலநடுக்கம்:  ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு
தேசிய செய்திகள்

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

தினத்தந்தி
|
2 Jun 2024 1:03 AM GMT

மணிப்பூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட மித அளவிலான நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

சந்தல்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

சீனாவின் ஆட்சி பகுதிக்கு உட்பட்ட ஜிசாங் நகரில் நேற்று மாலை 4.29 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்