< Back
தேசிய செய்திகள்
பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனை; 3 பேர் கைது - பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பு என தகவல்

Image Courtesy : @DGPPunjabPolice twitter

தேசிய செய்திகள்

பஞ்சாபில் போதைப்பொருள் விற்பனை; 3 பேர் கைது - பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் தொடர்பு என தகவல்

தினத்தந்தி
|
10 Aug 2023 10:09 PM GMT

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 பேர் ஹெராயின் போதைப்பொருளை விற்றுக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 12 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரும் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்