< Back
தேசிய செய்திகள்
டெல்லி-உப்பள்ளி இடையே நேரடி விமான சேவை; அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்குகிறது
தேசிய செய்திகள்

டெல்லி-உப்பள்ளி இடையே நேரடி விமான சேவை; அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்குகிறது

தினத்தந்தி
|
12 Oct 2022 7:00 PM GMT

டெல்லி-உப்பள்ளி இடையே நேரடி விமான சேவை அடுத்த மாதம் 14-ந்தேதி தொடங்குகிறது.

உப்பள்ளி;


மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உப்பள்ளி-டெல்லி இடையே தினசரி நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி-உப்பள்ளி இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான ேசவை அடுத்த மாதம்(நவம்பர்) 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதுதொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விமானம், டெல்லி விமான நிலையத்தில் இருந்து நவம்பர் மாதம் 14-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு உப்பள்ளி விமான நிலையம் வந்தடைகிறது. இதேபோல் உப்பள்ளியில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3.45 மணிக்கு டெல்லி சென்றடைகிறது.

உப்பள்ளி-டெல்லி விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. எனவே, உப்பள்ளி-தார்வார் உள்ளிட்ட வடகர்நாடகத்தை சேர்ந்த பயணிகள் இந்த விமான சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்