< Back
தேசிய செய்திகள்
சரக்கு ரெயிலில் சிக்க இருந்த தாயை காத்த தனயன்
தேசிய செய்திகள்

சரக்கு ரெயிலில் சிக்க இருந்த தாயை காத்த தனயன்

தினத்தந்தி
|
8 Dec 2022 10:22 AM GMT

கர்நாடகாவில் சரக்கு ரெயிலில் சிக்க இருந்த தாயை உடனடியாக கவனித்து அவரது உயிரை மகன் காப்பாற்றிய சம்பவம் நடந்து உள்ளது.



கலபுரகி,


கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் ரெயில் நிலையம் ஒன்றில் தாயும், மகனும் காத்திருந்தனர். இதன்பின்னர், அந்த பெண் கீழே இறங்கி குறுக்கு வழியில் தண்டவாளம் வழியே அடுத்த நடைமேடைக்கு செல்வதற்காக முயன்று உள்ளார்.

ரெயில் நிலையத்திலோ அல்லது அதனை ஒட்டிய பகுதியிலோ தண்டவாளம் வழியே கடந்து செல்வது ஆபத்து என்பதுடன், அதற்கு அபராதம், தண்டனையும் விதிக்க வழிவகையுள்ளது. இந்த நிலையில், அந்த பெண் கடந்து செல்வதற்கு முன்பு அந்த வழியே சரக்கு ரெயில் ஒன்று அவரை நோக்கி வந்துள்ளது.

இதனை அவரது மகன் கவனித்து உள்ளார். உடனடியாக ஓடி சென்ற அவர், தாயாரை கடந்து செல்ல விடாமல் தடுத்து, பிடித்து வைத்து கொண்டார். மராட்டியத்தின் ஹோதகி பகுதியில் இருந்து வந்த அந்த சரக்கு ரெயில் அவர்களை கடந்து சென்றுள்ளது.

அவர்கள் இருவரும் தண்டவாளத்திற்கும், நடைமேடை பகுதிக்கும் இடையே கீழே படுத்து தப்பினர். இதனை பலர் வீடியோவாக எடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்