< Back
தேசிய செய்திகள்
அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

'அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குகிறேன்' - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
26 Jun 2023 3:19 AM IST

அவசர நிலையை துணிச்சலுடன் எதிர்த்தவர்களை தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது, 1975-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந் தேதி அவசர நிலையை அமல்படுத்தினார். இது 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி முடிவுக்கு வந்தது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதின் 48-வது ஆண்டு நினைவு தினம் நேற்று ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், " அவசர நிலையை எதிர்த்து, ஜனநாயக உணர்வினை வலுப்படுத்த பாடுபட்ட துணிச்சலான மக்களை நான் தலைவணங்குகிறேன். அவசர நிலையின் இருண்ட காலம், நமது வரலாற்றில் மறக்க முடியாத காலம். நமது அரசியல் சாசனம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது முற்றிலும் எதிரானது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்