< Back
தேசிய செய்திகள்
ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோ: கவுண்ட்டவுன் இன்றிரவு தொடக்கம்
தேசிய செய்திகள்

ஒரே ராக்கெட்டில் 36 செயற்கைக்கோள்களை செலுத்தும் இஸ்ரோ: கவுண்ட்டவுன் இன்றிரவு தொடக்கம்

தினத்தந்தி
|
21 Oct 2022 1:01 PM GMT

இஸ்ரோ ஒரே ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை நாளை மறுநாள் நள்ளிரவில் விண்ணில் ஏவ உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜி.எஸ்.எல்.வி. மாா்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை நாளை மறுநாள் நள்ளிரவில் விண்ணில் ஏவ உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்தவகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.

வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்றிரவு (அதாவது நாளை நள்ளிரவை கடந்த அதிகாலை 12.07 மணிக்கு) தொடங்குகிறது.

மேலும் செய்திகள்