< Back
தேசிய செய்திகள்
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்;   கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி
தேசிய செய்திகள்

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி

தினத்தந்தி
|
28 Aug 2022 9:50 PM GMT

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலியானார்.

பெங்களூரு: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அக்சய் (வயது 26). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர் அமீஜ் என்பவருடன் கசவனஹள்ளியில் இருந்து சர்ஜாபுராவுக்கு மோட்டார் சைக்கிளில் அக்சய் புறப்பட்டு சென்றார்.

எச்.எஸ்.ஆா்.லே-அவுட் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது அக்சய் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் அக்சய் பலியானார். அவரது நண்பர் அமீஜ் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்