< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே மோதல்
|27 July 2022 4:18 AM GMT
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், குல்காம் மாவட்டத்தில், பிரைஹார்ட் கத்போரா என்னும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் .
இதை சற்றும் எதிர் பார்க்காத பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.