< Back
தேசிய செய்திகள்
நவி மும்பையில் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நவி மும்பையில் இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
14 Nov 2022 1:40 AM GMT

நவி மும்பையில் 2 தரப்பினர் ஒருவரையொருவர் தடி, ஆயுதங்களால் மோதிக்கொண்டதில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

தானே,

நவி மும்பையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 30 வயது நபர் கொல்லப்பட்டார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் கன்சோலியில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

கோபர்கைர்னே காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் அஜய் போசலே கூறுகையில், "இரு குழுக்களின் உறுப்பினர்களும் தடி, இரும்பு, மற்றும் பிற ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் புகார் அளித்தனர், அதன் அடிப்படையில் போலீசார் அவர்கள் மீது கலவரம், கொலை, கொலை முயற்சி ஆகிய வழக்குகளை பதிவு செய்தனர்.

இரு குழுக்களில் இருந்தும் தலா ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக திரு போசலே கூறினார்.

மேலும் செய்திகள்