< Back
தேசிய செய்திகள்
நிலவிற்கு செல்ல தயாராகும் சந்திரயான்3 விண்கலம்..! ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்த ராக்கெட் பாகங்கள்..
தேசிய செய்திகள்

நிலவிற்கு செல்ல தயாராகும் "சந்திரயான்3" விண்கலம்..! ஸ்ரீஹரிகோட்டா வந்தடைந்த ராக்கெட் பாகங்கள்..

தினத்தந்தி
|
10 Jun 2023 7:49 AM GMT

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை இரண்டாவது வாரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை இரண்டாவது வாரத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

சந்திரயான் திட்டத்தின் பகுதியான மூன்றாவது விண்கலம் (சந்திரயான்-3), ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எம்.கே. III என அழைக்கப்படும் இந்தியாவின் கனமான ஏவு வாகனமான மார்க்-III இல் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது.

சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும், இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லேண்டர்-ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம், சந்திரயான்-3 விண்கலம் அதன் சோதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.

இந்த நிலையில், விண்கலத்தை கொண்டுசெல்லவிருக்கும் எல்விஎம் எம்கே3 ராக்கெட் பாகங்கள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையத்திற்கு வந்தடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்