< Back
தேசிய செய்திகள்
சந்திரயான்-3 : விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள் வெளியீடு...!

Image Courtesy: @isro

தேசிய செய்திகள்

சந்திரயான்-3 : விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள் வெளியீடு...!

தினத்தந்தி
|
21 Aug 2023 3:53 AM GMT

சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சென்னை,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பகிர்ந்தது. பின்னர் கடந்த 18-ந்தேதி விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது.

பின்னர் இரண்டாவது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை நேற்று அதிகாலை 2 மணியளவில் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.



மேலும் செய்திகள்