< Back
தேசிய செய்திகள்
அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டியதாக புகார்: பஞ்சாப் முதல்-மந்திரி வீட்டிற்கு அபராதம்
தேசிய செய்திகள்

அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டியதாக புகார்: பஞ்சாப் முதல்-மந்திரி வீட்டிற்கு அபராதம்

தினத்தந்தி
|
23 July 2022 9:12 AM GMT

அனுமதியின்றி, விதிகள் மீறி குப்பை கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பஞ்சாப் முதல்-மந்திரி வீட்டிற்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தின் அண்மையில் முதல்-மந்திரியாக பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பக்வந் சிங், வீடு பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது.

இந்த வீட்டில் , அனுமதி இன்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து, வந்த சண்டிகர் நகர் முனிசிபாலிட்டி அதிகாரிகள்,

ஆய்வு செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டு சென்றுள்ளனர். "முதல்-மந்திரி மாநிலத்திற்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும், ஆனால், அவர் வீட்டில் இப்படிப்பட்ட ஒழுங்கற்ற செயல்கள் நடைபெறுகிறது." என உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷ் இந்தர் சிங் சித்து கூறினார்.

மேலும் செய்திகள்