< Back
தேசிய செய்திகள்
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு கவிதாவிடம் 11-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை
தேசிய செய்திகள்

டெல்லி மதுபான முறைகேடு வழக்கு கவிதாவிடம் 11-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை

தினத்தந்தி
|
6 Dec 2022 8:30 PM GMT

சட்டபேரவை உறுப்பினருமான கவிதாவுக்கு டெல்லியில் நடந்த மதுபான முறைகேடு வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகளும், சட்டபேரவை உறுப்பினருமான கவிதாவுக்கு டெல்லியில் நடந்த மதுபான முறைகேடு வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் 6-ந் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி கவிதாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு கடிதம் அனுப்பிய கவிதா, "ஏற்கனவே திட்டமிட்ட சில பணிகள் இருப்பதால் டிச. 6-ந் தேதி விசாரணையில் என்னால் ஆஜராக முடியாது. அதற்கு பதிலாக வரும் 11, 12, 14 அல்லது 15ந் தேதிகளில் ஐதராபாத்தில் உள்ள எனது இல்லத்தில் உங்களை சந்திக்க முடியும்" என கூறியிருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ. வருகிற 11-ந் தேதி ஐதாரபாத்தில் உள்ள கவிதாவின் இல்லத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்