< Back
தேசிய செய்திகள்
பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு முடித்து வைப்பு

File image

தேசிய செய்திகள்

பதஞ்சலி நிறுவனம் மீதான வழக்கு முடித்து வைப்பு

தினத்தந்தி
|
13 Aug 2024 7:50 AM GMT

பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்துள்ளது.

புதுடெல்லி:

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதஞ்சலி நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. சட்டத்தை மீறி செயல்படமாட்டோம் என பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் உறுதி அளித்தார். அதன்பிறகும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வெளியாகின. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மேலும், தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்தது. பதஞ்சலி நிறுவத்தின் உத்தரவாதத்தை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைக்க உத்தரவிட்டது.

பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்