< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்
தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் பாகிஸ்தான் ட்ரோனை சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படையினர்

தினத்தந்தி
|
12 Jun 2023 8:58 AM GMT

பஞ்சாப்பில் இந்திய - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஷைத்பூர் கலான் கிராமத்தின் புறநகரில் ட்ரோன் தேடப்பட்ட நிலையில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சாபின் டர்ன்-தரண் மாவட்டத்தில் உள்ள ராஜோக் கிராமத்தின் புறநகரில் எல்லைப் பாதுகாப்புப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு ட்ரோன் கைப்பற்றப்பட்டது. ராஜோகே கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய வயலில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் பஞ்சாப் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள் அடுத்தடுத்து பறந்ததால் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்கள் அத்துமீறி ஊடுருவும் சம்பவங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளன. கடந்த 2 நாள்களில் மட்டும் இதே போல 4-க்கு மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பஞ்சாப் பகுதி எல்லை பாதுகாப்பு படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்