< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் உயிரிழப்பு.!
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
21 Jun 2023 12:06 AM GMT

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பதோஹி,

உத்தரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தை சேர்ந்த முக்தார் அகமது ( வயது 22) என்பவருக்கும், ஜான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷினி (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 17-ந் தேதி திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து 18-ந் தேதி இருவரின் திருமண வரவேற்பு நடந்தது.

வரவேற்பு முடிந்த சிறிது நேரத்திலேயே ரோஷினிக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதைதொடர்ந்து, அவர் பதோஹி மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி ரோஷினி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து

மேலும் செய்திகள்