< Back
தேசிய செய்திகள்
பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

பிரிக்ஸ் மாநாடு: தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
18 Aug 2023 9:30 PM IST

15 ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 22-ந்தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்கிறார்.

புதுடெல்லி,

15 ஆவது பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 22-ந்தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்கிறார். பிரிக்ஸ் மாநாட்டில் ஆகஸ்ட் 22 முதல் 24-ந்தேதி வரை பிரதமர் பங்கேற்கிறார்.

2019ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு தலைவர்களையும் சந்திக்கிறார். தொடர்ந்து, "BRICS- Africa outreach and BRICS Plus Dialogue" என்ற சிறப்பு நிகழ்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 25-ல் கிரீஸ் நாட்டிற்கு பிரதமர் செல்கிறார். கிரீஸ் பிரதமர் கிரியோகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்