< Back
தேசிய செய்திகள்
இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு:  மக்கள் அச்சம்

(ANI File Photo)

தேசிய செய்திகள்

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு: மக்கள் அச்சம்

தினத்தந்தி
|
30 March 2023 8:08 AM GMT

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

ஸ்ரீநகர்,

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. கதுவா அருகே இருக்கும் குக்கிராமத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர்.

டிரோன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட குண்டு எல்லைக்கு அருகே தவறாக வீசப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு கிடைத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்