< Back
தேசிய செய்திகள்
பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
தேசிய செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

தினத்தந்தி
|
25 Aug 2022 6:54 AM GMT

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது. அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட, 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரையும், குஜராத் மாநில அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் எந்த அடிப்படையில், நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டனர். இந்த பொதுநல மனுக்கள் தொடர்பாக மத்திய, மற்றும் மாநில அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் இந்த வழக்கில் இணைந்து கொள்ளவும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்