< Back
தேசிய செய்திகள்
பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்க மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற பாட்டி - 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிக்க மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற பாட்டி - 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தினத்தந்தி
|
5 May 2023 1:18 AM GMT

பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹூக்லி,

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்லியில் பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அமானுஷ்ய பயிற்சி செய்யும் மந்திரவாதி ஒருவரிடம் சிறுவனின் பாட்டி அழைத்துச் சென்றதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

முன்னதாக ஹூக்லியைச் சேர்ந்த சுர்ஜித் பால் தாஸ் என்ற 4 வயது சிறுவன் தனது வீட்டிற்கு எதிரே உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு குழிக்குள் கையை விட்ட சிறுவனை பாம்பு ஒன்று கடித்தது. இந்த சம்பவம் நடந்தபோது சிறுவனின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதையடுத்து சிறுவனின் பாட்டி பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு பதிலாக உள்ளூர் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றார்.

மந்திரவாதி இல்லாததால் பின்னர் போல்பார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கிருந்து சிறுவன் சுச்சுரா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேற்கு வங்காள மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, உடனடி மருத்துவ உதவி இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகக் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தொகுதி சுகாதார ஆய்வாளர் கூறும்போது, "பாம்பு கடித்தால் விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வகையான தடுப்பூசிகளும் அங்கு உள்ளன. முன்னதாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். தற்போது, பாம்புக்கடியை தவிர்க்க சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் பிளீச்சிங் தெளித்துள்ளனர்" என்றார்.

மேலும் செய்திகள்