< Back
தேசிய செய்திகள்
கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
14 Oct 2022 6:45 PM GMT

மங்களூரு அருகே கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகா கோனஜே போலீஸ் எல்லைக்குட்பட்ட முச்சுகோடி பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ் ஷெட்டி (வயது 34). இவர் மங்களூரு அருகே உள்ள பச்சநாடி பகுதியில் இயங்கி வரும் கர்நாடக வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் நவராத்திரி பண்டிகைக்காக தன் தாய் வீட்டுக்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மங்களூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் கடன் தொல்லை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்