< Back
தேசிய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை

தினத்தந்தி
|
18 Jan 2024 5:16 PM GMT

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு வரும் 22-ந்தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்