மத்தியபிரதேசத்தில் மந்திரியின் சகோதரரை காரை ஏற்றி கொல்ல முயற்சி- 5 பேர் கைது
|அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குவாலியர்,
மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மந்திரி சபையில் எரிசக்தி துறை மந்திரியாக இருந்து வருபவர் பிரத்யுமன் சிங் தோமர். இவரது சகோதரர் சதேந்திர சிங் தோமர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தலைநகர் குவாலியரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர்.
அவர்களை பிரத்யுமன் சிங் தோமர் தட்டிக்கேட்டார். இதையடுத்து தாங்கள் வந்த காரில் ஏறிய அந்த மர்ம நபர்கள் பிரத்யுமன் சிங் தோமர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றனர். அவர் மீது காரை ஏற்ற 2 முறை முயற்சித்த நிலையில், கார் ஒரு டிராக்டர் மீது மோதி நின்றது.
அதன் பின்னர் அந்த மர்ம நபர்கள் காரில் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கு வந்த போலீசார் காரில் இருந்த 5 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.