< Back
தேசிய செய்திகள்
7 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு

Image Courtacy: ANI

தேசிய செய்திகள்

7 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு

தினத்தந்தி
|
10 July 2024 1:57 AM GMT

7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

புதுடெல்லி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதே போல மேற்குவங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, இமாசல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையும்.

மேலும் செய்திகள்