< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
23 Jun 2023 3:06 PM GMT

ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புபடையினர் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வரா மாவட்டம் மச்சால் செக்டர் சர்வதேச எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும்|எல்லை பாதுகாப்புபடையினர் கூட்டாக ரோந்து சுற்றி வந்தனர். அப்போது நான்கு பயங்கரவாதிகள் அத்துமீறி எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.

அவர்கள் மீது பாதுகாப்புபடையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பயங்கரவாதிகளும் பலியாகினர். சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போது அவர்களிடம் ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மற்றும் போதை மருந்து பண்டல்கள், பத்திரிக்கைகள், வரைபடங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்