< Back
தேசிய செய்திகள்
பயங்கரவாதிகள் மீண்டும் அட்டூழியம்; காஷ்மீரி பண்டிட் சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் மீண்டும் அட்டூழியம்; காஷ்மீரி பண்டிட் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
15 Oct 2022 10:02 AM GMT

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்து மதத்தை சேர்ந்த காஷ்மீரி பண்டிட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் இந்து மதத்தை சேர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மற்றும், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், சீக்கியர்கள் மீது பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காஷ்மீரி பண்டிட்கள் மீதான தாக்குதல் குறைந்தது.

இந்நிலையில், காஷ்மீரில் இந்து மதத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சவுதரி குண்ட் பகுதியை சேர்ந்த காஷ்மீரி பண்டிட் ஆனா இந்து மதத்தை சேர்ந்த பூரண் கிருஷ்ணன் பட் இன்று தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் கிருஷ்ணன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கிருஷ்ணனை மீட்ட குடும்பத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணனுக்கு மனைவியும், 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். காஷ்மீரில் இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் மீது கடந்த சில மாதங்களாக தாக்குதல் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்