< Back
தேசிய செய்திகள்
கஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் சிக்கினார்
தேசிய செய்திகள்

கஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் சிக்கினார்

தினத்தந்தி
|
10 Aug 2022 3:32 PM GMT

உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற ஆந்திர வாலிபர் சிக்கினார்.

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி ரெயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதை எதிரே வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக உப்பள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரங்கய்யா ரெட்டி (வயது 28) என்பதும், ஆந்திராவில் இருந்து உப்பள்ளிக்கு ரெயில் மூலம் வந்து இங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து அவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 12 கிேலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்