< Back
தேசிய செய்திகள்
சாதி சொல்லி திட்டி துடைப்பத்தால் தாக்கியதால் வாலிபர் தற்கொலை
தேசிய செய்திகள்

சாதி சொல்லி திட்டி துடைப்பத்தால் தாக்கியதால் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
21 Sep 2023 6:45 PM GMT

கோலார் அருகே நண்பரின் மனைவியை அவதூறாக கூறியதாக சாதி சொல்லி திட்டி துடைப்பத்தால் தாக்கியதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசாார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோலார்

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

தொழிலாளி

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குருலகெரே கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 30). தொழிலாளி. இவரது நண்பர் அசோக். இந்த நிலையில் நேற்று முன்தினம் சீனிவாஸ், அசோக், அவரது நண்பர்கள் ரமேஷ், தர்மேந்திரா, மஞ்சு ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.

அந்த சமயத்தில் சீனிவாஸ் திடீரென்று அசோக்கின் மனைவி பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அசோக்கும், அவரது நண்பர்களும் சேர்ந்து சீனிவாசை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் சாதியை சொல்லி திட்டியதுடன் மிரட்டலும் விடுத்துள்ளனர்.

தற்கொலை

மேலும் தன்னை அவதூறாக பேசியதை அறிந்த அசோக்கின் மனைவி துடைப்பத்தால் சீனிவாசை தாக்கியதுடன், அவரை சாதி சொல்லி திட்டியுள்ளார். இதனால் சீனிவாஸ் மனம் உடைந்தார்.

இந்த நிலையில் சாதி சொல்லி திட்டியதுடன் துடைப்பத்தால் தன்னை தாக்கியதால் அவமானம் அடைந்த சீனிவாஸ் வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் மாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்கொலை செய்த சீனிவாஸ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

துடைப்பத்தால் தாக்கியதால்...

விசாரணையில், அசோக்கின் மனைவியை அவதூறாக கூறியதால் அசோக்கும், அவரது நண்பர்களும், அவரது மனைவியும் சேர்ந்து சீனிவாசை தாக்கியதுடன், துடைப்பத்தால் தாக்கியதால் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக சீனிவாசின் குடும்பத்தினர் மாலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

அதில், சீனிவாசை சாதி சொல்லி திட்டியதுடன், துடைப்பத்தால் தாக்கியதால் அவமானத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்