< Back
தேசிய செய்திகள்
தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி
தேசிய செய்திகள்

தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி

தினத்தந்தி
|
27 Dec 2023 5:01 PM GMT

நாடு முழுவதும் 109 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 109 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்