< Back
தேசிய செய்திகள்
அசாமில் 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - இருவர் கைது
தேசிய செய்திகள்

அசாமில் 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் - இருவர் கைது

தினத்தந்தி
|
15 July 2022 8:27 PM GMT

போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக அசாமில் ஒரு பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தில் கிட்டதட்ட 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள டோகோக என்ற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நாகாலாந்தின் டியாம்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து சோப்புப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றோருவர் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் பகுதியைச் சோர்ந்த பெண் என்றும் போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பாகும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்