< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 7 பயணிகள் பலி
|21 April 2023 8:20 PM GMT
பஸ் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் இருந்து சொகுசு பஸ் 45-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அம்ப்த்கர்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
லக்னோ - கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.