< Back
தேசிய செய்திகள்
பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 7 பயணிகள் பலி
தேசிய செய்திகள்

பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 7 பயணிகள் பலி

தினத்தந்தி
|
21 April 2023 8:20 PM GMT

பஸ் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பயணிகள் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் இருந்து சொகுசு பஸ் 45-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அம்ப்த்கர்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

லக்னோ - கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்