< Back
தேசிய செய்திகள்
பள்ளி முதல் பப் வரை  சிறுமிக்கு சொகுசு காரில் நடந்த பாலியல் வன்கொடுமை
தேசிய செய்திகள்

"பள்ளி முதல் பப் வரை" சிறுமிக்கு சொகுசு காரில் நடந்த பாலியல் வன்கொடுமை

தினத்தந்தி
|
4 Jun 2022 10:11 AM GMT

பிறந்தநாள் பார்ட்டியாக ஆரம்பித்த கொண்டாட்டம் பாலியல் வன்கொடுமையில் முடிந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள் 5 கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமி அங்குள்ள பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி கூட வந்த 5 சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைதான 5 பேரில் 3 பேர் சிறுவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதில் பல கட்சிப் பிரமுகர்களின் பிள்ளைகள் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிறந்தநாள் பார்ட்டியாக ஆரம்பித்த கொண்டாட்டம் பாலியல் வன்கொடுமையில் முடிந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பப் மேனேஜர் கூறும் போது

மே 28-ல் நடந்த பார்ட்டி: கடந்த மே 28-ஆம் தேதியன்று ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல பப் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நடந்தது. அந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருமே அப்பகுதியில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த 11, 12 வகுப்பு மாணவ, மாணவிகள். அவர்களில் பலர் அரசியல், சிலர் செல்வாக்கு உள்ள குடும்பத்தை கொண்டவர்கள்.

பார்ட்டிக்கு 150 பேர் வருவார்கள் என்று சொல்லப்பட்டாலும் சற்று நேரத்தில் 180 பேர் வரை வந்துவிட்டனர். நாங்கள் இது 18 வயதுக்கும் கீழ் உள்ளோரும் கலந்து கொள்ளும் பார்ட்டி என்பதால் மது விருந்துக்கு அனுமதிக்கவில்லை. சிகரெட் கூட புகைக்கக்கூடாது என்று கூறியிருந்தோம்.

மாலை 6 மணி வரை பார்ட்டி நடந்தது. பார்ட்டி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி புறப்பட்டார். அவர் தனியாக வந்ததால் அவரை இறக்கி விடுவதாக சில மாணவர்கள் சொல்லி சிவப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றினர். அனால் அவரை வற்புறுத்தியதாக தெரியவில்லை. அவர்கள் எல்லோரும் நண்பர்கள் போல் இயல்பாகவே பேசி சிரித்து ஏறி சென்றனர். அந்தக் காரின் பின்னால் நம்பர் பிளேட் இல்லாத இன்னொரு கார் புறப்பட்டுச் சென்றது. அது இனோவார் கார். அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்டஹ் போலீசார், மாணவர்கள் சென்ற பென்ஸ் கார் ஜூபிளி ரோடு 37-ல் நிறுத்தப்பட்டது. அங்கே உள்ள பிரபல பேக்கரியில் அரை மணி நேரம் அனைவரும் செலவழித்துள்ளனர். பின்னர் அந்தக் கார் புறப்பட்டது. அதன் பின்னாலேயே இன்னோவா காரும் பின் தொடர்ந்தது. பின்னர் 7.10 மணிக்கு இன்னோவா காரில் இருந்த அந்தச் சிறுமி பப் வாசலில் இறக்கிவிடப்பட்டார். மாணவி ஏன் பென்ஸ் காரில் சென்று இன்னோவா காரில் இறங்கினார்? அவரை மிரட்டி கார் மாறச் செய்தனரா? - இது குறித்து விசாரிக்கப்படுகிறது

பின்னர், மாணவி தனது தந்தையை அழைத்து தன்னை பப்பில் இருந்து கூட்டிச் செல்லுமாறு கூறியுள்ளார். அவர் அங்கு 15 நிமிடங்களில் வந்துவிட அவருடன் சிறுமி சென்றுவிட்டார். தனக்கு நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்த சிறுமி வீடு செல்லும் வரை ஏதும் சொல்லவில்லை.

வீட்டுக்குச் சென்ற பின்னர் அவரது பெற்றோர் சிறுமியின் கழுத்தில் இருந்த காயத்தைப் பார்த்துள்ளனர். அப்போது அவர் தன்னுடன் காரில் வந்த சிலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார்.

இது குறித்து போலீஸில் சொல்ல வேண்டாம் என்று பெற்றோரும் அமைதி காத்துள்ளனர். பின்னர் 3 நாட்கள் கடந்து சிறுமியின் தந்தை ஜூபிளி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிறுமி தற்போது பரோஷா மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. சிறுமியின் வாக்குமூலத்தில் கிளம்பும்போது அவரை இன்னோவா காரில் ஏறுமாறு நிர்பந்தித்ததாகவும், அந்தக் காரில் வேறு 5 மாணவர்கள் இருந்ததாகவும், அவர்கள் பஞ்சாரா மலைப்பகுதி அருகேவுள்ள இடத்துக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அந்த நபர்கள் சிறுமியை பப் வாசலிலேயே இறக்கிவிட்டுவிட்டுச் சென்றனர் என்று போலீசில் சிறுமி கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்