< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
|28 Jun 2023 9:19 AM GMT
லாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜதாரா நகருக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர்.
டைட்யா மாவட்டம் புஹரா கிராமத்தில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் அருகே இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.