< Back
தேசிய செய்திகள்
திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பயணித்த கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து - 5 பேர் பலி
தேசிய செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பயணித்த கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து - 5 பேர் பலி

தினத்தந்தி
|
22 April 2024 9:30 AM GMT

திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பயணித்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த 8 பேர் பீகார் மாநிலம் டியோரியாவில் நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று அதிகாலை காரில் சென்றனர்.

டெல்லி - ஆக்ரா இடையேயான யமுனா தேசிய நெடுஞ்சாலையில் எட்மட்பூர் பகுதியில் அதிகாலை சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். டிரைவர் மதுபோதையில் கார் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்