< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் சாவு

தினத்தந்தி
|
16 Sep 2022 9:46 PM GMT

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 22 ஆயிரத்து 711 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 426 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 230 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 12 பேருக்கும், ஹாசனில் 19 பேருக்கும், கலபுரகி, குடகில் தலா 13 பேருக்கும், மைசூருவில் 28 பேருக்கும், ராமநகரில் 21 பேருக்கும், சிவமொக்காவில் 15 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கதக், கலபுரகி, மைசூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒரே நாளில் 492 பேர் குணம் அடைந்தனர். 3 ஆயிரத்து 618 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.87 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்