< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒரு போலீஸ்காரரும் பலி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காஷ்மீரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒரு போலீஸ்காரரும் பலி

தினத்தந்தி
|
25 May 2022 7:53 PM GMT

காஷ்மீரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் நாஜிபாட் கிராசிங் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், காஷ்மீர் போலீசாருக்கும் இடையே திடீரென துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. போலீஸ் தரப்பில் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இந்த தகவல்களை போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார். பெரிய தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் அந்த பயங்கரவாதிகள் ஸ்ரீநகருக்கு வந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு இதுவரை 22 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்