< Back
தேசிய செய்திகள்
இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் இயங்கும் - ரெயில்வே வாரியம்
தேசிய செய்திகள்

இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் இயங்கும் - ரெயில்வே வாரியம்

தினத்தந்தி
|
4 Jun 2023 11:58 AM GMT

2 ரெயில் பாதைகளிலும் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் , விபத்து நடந்த பாஹாநாகா ரெயில் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்குள் 2 ரெயில் பாதைகள் இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

சீரடைந்த 2 ரெயில் பாதைகளிலும் ரெயில்கள் மெதுவாக இயக்கப்படும் என ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்