< Back
தேசிய செய்திகள்
கிராமத்தில் ஹாயாக உலா வந்த 2 சிறுத்தைகள்
தேசிய செய்திகள்

கிராமத்தில் ஹாயாக உலா வந்த 2 சிறுத்தைகள்

தினத்தந்தி
|
24 July 2022 5:07 PM GMT

துமகூரு அருகே கிராமத்தில் 2 சிறுத்தைகள் ஹாயாக உலா வந்தன.

துமகூரு:

துமகூரு மாவட்டம் திப்தூர் தாலுகாவில் மாரனகெரே கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைகள் மாரனகெரே கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இரவு நேரத்தில் சிறுத்தைகள் ஊருக்குள் ஹாயாக உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுபற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கிராம மக்கள், சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதுவைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்