< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்முவில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து: மதவழிபாட்டு தலத்திற்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பலி
|30 May 2023 10:13 AM GMT
ஜம்முவில் பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் மதவழிபாட்டு தலத்திற்கு சென்ற 10 பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் கத்ரா பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான மாதா வைஷ்னவி தேவி கோவில் உள்ளது.
இந்த வழிபாட்டு தலத்திற்கு பீகாரில் இருந்து 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் பஸ்சில் வந்தனர். பக்தர்கள் வந்த பஸ் ஜம்முவின் ஹஜர் கொட்டில் பகுதியில் வந்தபோது அங்குள்ள பாலத்தில் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 57 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.