< Back
சினிமா செய்திகள்
சிறை மீண்டு வந்த கலைவாணருக்கு வரவேற்பு
சினிமா செய்திகள்

சிறை மீண்டு வந்த கலைவாணருக்கு வரவேற்பு

தினத்தந்தி
|
29 Jun 2023 6:51 AM GMT

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி தியாகராஜ பாகவதரும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சுமார் 30 மாத சிறைவாசத்துக்குப் பிறகு அவர்கள் குற்றமற்றவர்கள் என்று 1946-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடலூரில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நியூ சினிமா உரிமையாளர் தங்கராஜ் முதலியார், கலைவாணரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு விருந்து அளித்தார். விழாவில் கலந்துகொண்டவர்கள் கலைவாணருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்