< Back
சினிமா செய்திகள்
தனது மகள் குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு
சினிமா செய்திகள்

தனது மகள் குறித்து விஜய் ஆண்டனி உருக்கமான பதிவு

தினத்தந்தி
|
21 Sep 2023 3:02 PM GMT

சமீபத்தில் இறந்த தனது மகள் குறித்து விஜய் ஆண்டனி உருக்கமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19-ந்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மகள் குறித்து விஜய் ஆண்டனி தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;

"அன்பு நெஞ்சங்களே

என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள்.

அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கிவைப்பாள்.

உங்கள் விஜய் ஆண்டனி." இவ்வாறு அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்