< Back
சினிமா செய்திகள்
தனி ஒருவன் 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
சினிமா செய்திகள்

'தனி ஒருவன் 2' படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு

தினத்தந்தி
|
28 Aug 2023 3:04 PM GMT

'தனி ஒருவன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 'தனி ஒருவன் 2' படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.

சென்னை,

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.

இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது. தனி ஒருவன் 2 படத்தையும் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கிறார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு நிரவ் ஷா, இசை சாம் சி.எஸ்., கலை கிரன், படத்தொகுப்பு ஆர் வசந்தகுமார் ஆகியோர் கவனிக்கின்றனர்.

மேலும் செய்திகள்