< Back
சினிமா செய்திகள்
மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம்  - படக்குழு வெளியிட்ட அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்படத்தின் இரண்டாவது பாகம் - படக்குழு வெளியிட்ட அறிவிப்பு..!

தினத்தந்தி
|
3 Jan 2024 6:15 PM GMT

முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம பாகத்திலும் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 2009 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் ராசு மதுரவனின் இயக்கில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். இந்தப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் (UnitedArts) நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தில் சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில் சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா போன்றவர்கள் நடித்திருந்தனர். குடும்பக்கதையையும், பங்காளிச் சண்டையையும் மிகவும் நேர்த்தியாக வெளிக்காட்டிய இந்த படம் 2009-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்களுக்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் (UnitedArts) நிறுவனம் 2ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி கே.பி. ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



மேலும் செய்திகள்