< Back
சினிமா செய்திகள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது  பொன்னியின் செல்வன்-1- ரசிகர்கள் ஆரவாரம்
சினிமா செய்திகள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியானது 'பொன்னியின் செல்வன்-1'- ரசிகர்கள் ஆரவாரம்

தினத்தந்தி
|
30 Sep 2022 2:11 AM GMT

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்".

இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது.

திரையரங்கில் குவிந்துள்ள மக்கள் ஆரவாரத்துடன் படத்தை ரசித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்